• Latest News

    October 14, 2021

    ரிசாத் பதியூதீன் பிணையில் விடுதலை

     குற்ற புலனாய்வு பிரிவில் பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதீன் (Rishad Bathiudeen) சற்று முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


    50 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைக்கள் இரண்டு மற்றும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை குற்ற விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளது.

    கோட்டை நீதவான பிரியந்த லியனகே இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    இதற்கு மேலதிகமாக ரிஷாட் பதியூதினின் வெளிநாட்டு கடவுச்சீட்டு நீதிமன்றத்தின் பொறுப்பின் கீழ் எடுக்குமாறு உத்தரவிடப்பட்ட நிலையில் அவரது வெளிநாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.



     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரிசாத் பதியூதீன் பிணையில் விடுதலை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top