• Latest News

    March 19, 2024

    நாங்கள் இன்னும் கடினமான இடத்தில் இருக்கின்றோம் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

     


    நாங்கள் இன்னும் கடினமான இடத்தில் இருக்கின்றோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

    இப்போது ஒரு மாற்றம் தெளிவாக தெரிகின்றது. எனவே இந்த வழி சரியானது என்று சொல்லலாம். இதனை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.

    சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மாறும், நாம் ஆட்சிக்கு வந்தால் வரி விதிக்க மாட்டோம் என்று கூறுவது எல்லாம் மாயை. இவற்றை மக்கள் புரிந்து கொள்கின்றனர். அனைத்து நேர்மறைகள் இருந்த போதிலும், நாங்கள் இன்னும் கடினமான இடத்தில் இருக்கிறோம்.

    எதிர்க்கட்சியினர் பல்வேறு விடயங்களைச் சொன்னாலும், செய்தாலும் தனியொருவர் இந்த நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்ட போது, சுமார் ஐம்பது வயதைக் கடந்த எதிர்க்கட்சித் தலைவரால் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாங்கள் இன்னும் கடினமான இடத்தில் இருக்கின்றோம் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top