ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை மேலும் நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி வரை குறித்த தடையை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் இன்று புதன்கிழமை (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவை ஜூன் மாதம் 12 ஆம் திகதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment