• Latest News

    June 30, 2025

    இன்று(30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்

    இன்று(30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
    வெள்ளை டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
     
    இதன்படி, வெள்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை 274 ரூபாவிலிருந்து 289 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. மண்ணெண்ணை லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
     
    இதன்படி, மண்ணெண்ணை ஒரு லீற்றரின் விலை 178 ரூபாவிலிருந்து 185 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. 92 ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
     
    இதன்படி, 92 ஒக்டேன் ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 293 ரூபாவிலிருந்து 305 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.விலைகளில் மாற்றமில்லை
     
    இதேவேளை, 4 ஸ்டார் யூரோ 4 ரக லங்கா சுப்பர் டீசல் மற்றும் 95 ஒக்டேன் யூரோ 4 ரக பெற்றோல் என்பனவற்றின் விலைகளில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்த விலை மாற்றம் தொடர்பில் அறிவித்துள்ளது.    
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இன்று(30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top