• Latest News

    September 06, 2025

    இலங்கையைச் சேர்ந்த மற்றுமொரு பாதாள குழு தலைவர் ஓமானில் கைது!


    ஓமானில் இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவரான ‘மிதிகம சூட்டி’ என அழைக்கப்படும் பிரபாத் மதுஷங்க கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

    பிரபாத் மதுஷங்க , தென்னிலங்கையில் செயற்படுகின்ற பாதாள உலகக் குழுவின் தலைவர் எனவும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவுடன் , பிரபாத் மதுஷங்க நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

    முதலில் டுபாய்க்கு தப்பிச்சென்று அதன் பின்னர் ஓமானில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த மதுஷங்கவை ஓமான் பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.  

    Next
    This is the most recent post.
    Older Post
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையைச் சேர்ந்த மற்றுமொரு பாதாள குழு தலைவர் ஓமானில் கைது! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top