ஈரான் முதலில் தாக்காது, ஆனால் போருக்குத் தயாராக உள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அறிவித்துள்ளார்.
மேலும், அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இஸ்ரேலுடனான 12 நாள் மோதலின் போது இருந்ததை விட ஈரான் "இன்னும் தயாராக" இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஈரானில் நிலவி வரும் அமைதியின்மைக்கு மத்தியில் நடந்து வரும் கட்டுப்பாடுகள் பாதுகாக்கப்படுவதாகவும் "இனி எந்த அச்சுறுத்தல்களும் இல்லை என்பதை நாங்கள் உறுதி செய்யும் வரை" அந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, போராட்டத்தை கட்டுப்படுத்த ஈரான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அமெரிக்கா தலையிட்டால் போரை மேற்கொள்ள தயங்க மாட்டோம் என ஈரான் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment