• Latest News

    February 04, 2026

    கல்முனை மாநகர சபையில் சுதந்திர தின நிகழ்வு

     (சாய்ந்தமருது மேலதிக நிருபர்)

    கல்முனை மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த 78ஆவது தேசிய சுதந்திர தின விழா, நேற்று புதன்கிழமை (4) மாநகர சபை வளாகத்தில் மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. 

    இதன்போது மாநகர ஆணையாளரினால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு, விஷேட உரை நிகழ்த்தப்பட்டது. அத்துடன் நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்வில் மாநகர சபை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகர சபையில் சுதந்திர தின நிகழ்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top