• Latest News

    September 16, 2013

    ரயில் பற்றுச்சீட்டு வழங்குவதற்கு உத்தியோகத்தர் இல்லாமை தொடர்பில் விசாரணை!

    அனுராதபுரம், புதிய நகரம் ரயில் நிலையத்தில் ரயில் பற்றுச்சீட்டு வழங்குவதற்கு இன்று காலை உத்தியோகத்தர் ஒருவர் இல்லாமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டது.

    ரஜரட்ட ரயில் இன்று காலை ரயில் நிலையத்திற்கு வருகை தந்த போது, பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கப்படவில்லை என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ ரத்நாயக்க கூறினார்.

    ரயில் நிலையத்தின் ரயில்வே உப உத்தியோகத்தர் பணிக்கு சமூகமளிக்காமையே இதற்கு காரணமாகும்.


    இதற்கமைய  புதிய நகரம் ரயில் நிலையத்தில் ஏறிய பயணிகள் ஷ்ராவஸ்திபுர ரயில் நிலையத்திலேயே தமக்கான ரயில் பற்றுச்சீட்டை பெற்றுக்கொண்டனர்.

    இதனால் ரயில் போக்குவரத்தில் 10 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இந்தச் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பிரதேச ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரயில் பற்றுச்சீட்டு வழங்குவதற்கு உத்தியோகத்தர் இல்லாமை தொடர்பில் விசாரணை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top