• Latest News

    September 12, 2013

    ஈரான் நாட்டு தூதுவருடன் கல்முனை அபிவிருத்தி பற்றி கல்முனை முதல்வர் பேச்சுவார்த்தை!

    (அகமட் எஸ். முகைடீன்)
    கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கைக்கான ஈரான் நாட்டு தூதுவர் டாக்டர். முகம்மட் நபி ஹசானி போரை நேற்று (11.09.2013) தூதரக அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
    கல்முனை மாநகர முதல்வரின் புதிய சிந்தனை நோக்கிய பயணத்தின் மற்றுமொரு அம்சமாக  மறைந்த மாபெரும் தலைவர் அஸ்ரப்பின்  கனவை நனவாக்கும் வகையில் கிழக்கின் வியாபார கேந்திர மையமாக காணப்படும் கல்முனையினை  அபிவிருத்தி செய்யும்  வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதாகும். அந்தவகையில் தன்னால் முடிந்த முயற்சிகளை கல்முனை மாநகர முதல்வர் மேற்கொண்டு வருகின்றார்.
    அதற்கு அமைவாக கல்முனை நகரின் அபிவிருத்தி பற்றியும் கல்முனை மாநகர முதல்வர் ஈரான் நாட்டின் தூதுவரோடு கலந்துரையாடினார்.

    இதற்கமைவாக இச்சந்திப்பின்போது கல்முனை அபிவிருத்தி உள்ளிட்ட இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஈரான் நாட்டு தூதுவருடன் கல்முனை அபிவிருத்தி பற்றி கல்முனை முதல்வர் பேச்சுவார்த்தை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top