அமெரிக்காவிற்கு எதிரான தலைவர்களை கொலை
செய்வதற்கு நூதனத் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக மஹரகம புற்று நோய்
வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர்
டொக்டர் வசந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரச தலைவர்கள் மற்றும்
முக்கியஸ்தர்கள் அமெரிக்கா அல்லது வேறு நாடுகளுக்கு விஜயம் செய்யும் போது
அவர்களது உடலுக்குள் புற்று நோய் கிருமிகளை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அரச தலைவர்கள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் போது மிகவும் நிதானத்துடன் செயற்பட வேண்டும். வெளிநாட்டு விஜயங்களின் போது அளிக்கப்படும் வரவேற்றுக்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். கைலாகு செய்தல், முத்தமிடல் போன்றவற்றின் மூலம் புற்று நோய்த் தொற்று பரவக் கூடும்.
பயணங்களின் போதும், தங்குமிடங்களிலும்
இவ்வாறு புற்று நோய்த் தொற்றுப் பரவக் கூடும். வெளிநாட்டு பயணங்களின் போது
கையுறை அணிந்து கொள்ள வேண்டியது அவசியமானது.
நோய்க் கிருமி தொற்றுவதனை தடுக்க நோய் தடுப்பு மருந்துகளை உட்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.கடந்த காலங்களில் அமெரிக்காவிற்கு எதிராக குரல் கொடுத்த சில அரச தலைவர்கள் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாக குற்றம் சுமத்தியுள்ளார்.
நோய்க் கிருமி தொற்றுவதனை தடுக்க நோய் தடுப்பு மருந்துகளை உட்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.கடந்த காலங்களில் அமெரிக்காவிற்கு எதிராக குரல் கொடுத்த சில அரச தலைவர்கள் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாக குற்றம் சுமத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment