ஜெர்மனியின் வெளிநாட்டு உளவுத்துறை BND உயரதிகாரி ஒருவர் கூறியதாக வெளியாகியுள்ளது இந்த தகவல்.சிரியாவுக்கு அருகேயுள்ள கடல் பகுதியில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள
ஜெர்மன் கடற்படையின் கப்பலான ‘ஒகெர்’, சிரியா உயர்மட்ட தகவல் தொடர்புகளை
ஒட்டுக்கேட்ட வகையில் இந்த தகவல் பெறப்பட்டதாகவும், அந்தப் பத்திரிகை
கூறியுள்ளது.
இந்த செய்தி வெளியானதை அடுத்து, ஜெர்மன் உளவுத்துறையை தொடர்புகொண்ட சர்வதேச மீடியாக்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார், உளவுத்துறை தகவல் தொடர்பாளர்.
“சிரியா ராணுவ தலைமை கெமிக்கல் ஆயுதங்களை போராளி அமைப்பினர்மீது உபயோகிக்க
கடந்த 4 மாத காலமாக அனுமதி கேட்டபடி இருந்தது. ஆனால், சிரியா ஜனாதிபதியின்
அனுமதி அவர்களுக்கு இறுதிவரை கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ள ஜெர்மன்
பத்திரிகை, “சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினாலும், ஜனாதிபதி
அசாத்தை பதவியில் இருந்து அகற்ற முடியாது” என உளவுத்துறை
தெரிவித்துள்ளதாகவும் எழுதியுள்ளது.
சிரியா மீது மேலை நாடுகள் ராணுவ நடவடிக்கை எடுப்பது என்ற திட்டத்தை,
ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்த நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. இன்னமும்
அதே நிலைப்பாட்டிலேயே உள்ளார்கள் அவர்கள்.
0 comments:
Post a Comment