அமெரிக்க
அரசின் இரகசிய ஆவணங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடெனுக்கு ஜெர்மனி நாட்டு
அமைப்பின் ஊழலை அம்பலப்படுத்துபவர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மனியைச்
சேர்ந்த விஞ்ஞானிகள் சங்கமும், அணு ஆயுதங்களுக்கு எதிரான சர்வதேச
வழக்குரைஞர் சங்கத் தின் ஜெர்மனி பிரிவும் சேர்ந்து ஊழலை அம்பலப்படுத்
துபவர் பரிசை 1999ஆம் ஆண்டு உருவாக்கின.இவ்விழாவில் பிரபல பத்திரிகையாளர் கிளென் கிரீன்வால்டும் கலந்து கொண்டார். அவர், ஸ்னோடென் அனுப்பி வைத்த அமெரிக்க மற்றும் பிரிட்டன் உளவு அமைப்புகளின் மிகவும் ரகசியமான ஆவணங்களைக் கொண்டு பல்வேறு கட்டுரைகளை 'கார்டியன்' பத்திரிகையில் எழுதியுள்ளார். அவர், அமெரிக்காவின் உளவு வேலைகளை அம்பலப்படுத்துவதற்கு ஸ்னோடென் துணிச்சலாக எடுத்த முயற்சிகளைப் பாராட்டிப் பேசினார்.
0 comments:
Post a Comment