• Latest News

    September 19, 2013

    முர்ஸி பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக குடும்பத்துடன் பேசினார்

    எகிப்து முன்னாள் அதிபர் முஹம்மது முர்ஸி தனது சட்டக்குழு உறுப்பினரின் மூலம்இ கடந்த வாரம் தொலைபேசியில் குடும்பத்துடன் உரையாடினார்.
    இது குறித்து வழக்கறிஞர் முஸ்தபா அத்தாயாஹ் கூறியதாவது:

    முஹம்மது முர்ஸி தொலைபேசியில் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த வாரம் பேசினார். அடுத்த இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அவர்களுடன் பேசினார். 62 வயதான முர்ஸி நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றார்.
    இவ்வாறு வழக்கறிஞர் முஸ்தபா அத்தாயாஹ் கூறினார்.
    ஜூலை 3ல் இராணுவம்  சதிப் புரட்சியின் மூலம் அநியாயமாக முர்சியின் ஆட்சியைக் கைப்பற்றி பதவியிலிருந்து நீக்கியது. பின்னர் அவரை அறிவிக்கப்படாத மறைவிடத்தில் வைத்திருந்தது.

    இதற்கெதிராக மக்கள் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால்இ அவரை விடுதலை செய்யாமல் தொடர்ந்து மறைவிடத்திலேயே ரகசியமாக வைத்திருக்கிறது.

    முஹம்மது முர்ஸியை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் மற்றும் ஆப்பிரிக்க யூனியன் பிரதிநிதிகள் சிறையில் சந்தித்துப் பேசினர். முர்ஸி மீது எதிர்ப்பாளர்களை கொலை செய்ய முயன்றதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே முர்ஸி நீதிமன்றத்தில் ஆஜரானார். தற்பொழுது மறு விசாரணைக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முர்ஸி பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக குடும்பத்துடன் பேசினார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top