• Latest News

    September 06, 2013

    சம்­பந்­தனை உட­ன­டி­யாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்: கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர்

    இலங்­கையில் பிரி­வி­னை­வா­தத்தை தூண்டும் பிர­சா­ரத்தை மேற்­கொண்­டுள்ள சம்­பந்­தனை உட­ன­டி­யாக கைது செய்து சிறையில் அடைக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என  பொது­ப­ல­சே­னாவின் பொது­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர் வலியுறுத்துகின்றார்.
    அவரைக் கைது செய்யாமல் பாராட்டிக் கொண்டிருந்தால்  எதிர்­கா­லத்தில் சிங்­கள மக்கள் தமது உரி­மை­க­ளுக்­காக ஆயுதம் ஏந்தும் ஆபத்­தான நிலை உரு­வாகும் என  எச்­ச­ரிக்கையும் விடுத்தார்.


    தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு வெளி­யிட்­டுள்ள தேர்தல் விஞ்­ஞா­பனம் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர் மேற்கண்டவாறு தெரி­வித்தார்.

    அவர் மேலும் தெரி­விக்­கையில்,

    வடக்கு கிழக்கு என்­பது இந்­நாட்டின் பிரிக்­கப்­பட்ட தனி பிர­தே­சங்கள் அல்ல. அவை இலங்­கையின் தன்­னா­திக்­கத்­திற்கு உட்­பட்­டவை. எனவே,  சம்­பந்தன் இலங்­கையை ஆட்சி செய்த ஆங்­கி­லே­யரை போல் நாட்டை வடக்கு, கிழக்கு என தனி­மைப்­ப­டுத்தி பேசு­கிறார்.

    அத்­தோடு 'தன்­னாட்சி அதி­காரம் தொடர்­பாக இலங்கை அர­சாங்­கத்­துடன் பேச தயார்' என்றும் அவர் தெரி­வித்­துள்ளார். இதன் மூலம் அவர் தலைக்குள் இன்னும் பிரி­வி­னை­வாதம் இருப்­பது வெளிப்­ப­டு­கி­றது.

    30 வருட கால யுத்தம் எமது வாழ்வை அழித்து விட்­டது. அர­சி­யல்­வா­திகள் எடுத்த பிழை­யான தீர்­மா­னங்­களால் பல அழி­வு­களை சந்­தித்தோம். பயங்­க­ர­வா­தத்தை அழித்து, ஒழித்து கட்­டிய நாம் தற்­போது வெற்றி பெற்­றுள்ளோம்.

    தமிழ் மக்­க­ளுக்கோஇ முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரா­கவோ நாம் யுத்தம் செய்­ய­வில்லை. பயங்­க­ர­வா­தத்தின் பிரி­வி­னை­வாத யுத்­தத்­தையே தோல்வி அடைய செய்தோம். இவ்­வா­றான ஒரு நிலையில் சம்­பந்தன் தன்­னாட்சி அதி­காரம் தமக்கு தேவை என கூறி­யுள்­ளமை அர­சியல் அமைப்பை மீறும் செய­லாகும். எனவே அவ­ருக்கு பாரா­ளு­மன்­றத்­திற்கு வரும் அரு­கதை கிடையாது. அவர் இலங்­கையின் சட்­டத்தை மீறி­யுள்ளார்.
    எனவே, சட்­டத்தை மீறிய சம்­பந்­தனை அர­சாங்கம் உட­ன­டி­யாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இதே வேளை, இந்­தியா, மொறக்கோ, ஜேர்­மனி போன்ற நாடு­களில் இருந்து இங்கு வந்த முஸ்­லிம்­களும் உரி­மை­களை கேட்கத் தொடங்­கி­யுள்­ளனர்.

    இவ்­வாறு தமிழர்களுக்கும்,முஸ்­லிம்­க­ளுக்கும் உரி­மைகள் வழங்­கப்­ப­டு­மானால் சிங்­க­ள­வர்கள் எங்கு போவார்கள். இந்­நிலை தொடருமானால், எதிர்காலத்தில் சிங்களவர்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தும் ஆபத்தானதொரு நிலைமை உருவாகும்.

    எனவே, அரசாங்கம் நாட்டையும், சிங்கள மக்களையும் பாதுகாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சம்­பந்­தனை உட­ன­டி­யாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்: கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top