• Latest News

    November 15, 2013

    இலங்கையில் 1982 முதல் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விபரம் சேகரிக்க முடிவு

    1983 ஜூலைக் கலவரத்தின் போது பிடிக்கப்பட்ட படம்
    இலங்கை 1982 ம் ஆண்டுக்கு பின்பு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் சொத்துகள் சம்பந்தமான விபரங்களை சேகரிப்பதற்கு இலங்கை குடிசன புள்ளிவிபரத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
    நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரையொன்றுக்கு அமையவே இந்தத் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக இலங்கை குடிசன புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் டீ. ஸீ. எஸ். குணவர்தன பிபிசியிடம் தெரிவித்தார்.
    இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்த வேண்டுமானால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் மரணமடைந்த நபர்கள் மற்றும் சொத்துகள் சம்பந்தமான விபரங்களை சேகரிப்பது அவசியம் என நல்லிணக்க அணைக்குழுவினால் பரிந்துரையொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.
    இதன் காரணமாகவே தாம் இந்தப் புள்ளி விபர மதிப்பீட்டை நடத்தத் தாம் தீர்மானித்துள்ளதாகவும், இந்த மதிப்பீடு எதிர்வரும் 25 ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
    கிராம சேவகர்கள் ஊடாக நாடு பூராவும் அமைந்துள்ள வீடுகள் மற்றும் அகதி முகாம்களுக்குச் சென்று தாம் இந்த மதிப்பீட்டை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் இலங்கைக் குடிசன புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் டீ.ஸீ. எஸ். குணவர்தன கூறினார்.
    BBC-
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் 1982 முதல் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விபரம் சேகரிக்க முடிவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top