இதே வேளை, நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பொது மக்களை ஒன்று திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றன.
பொது மக்களினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளவர்களை பாதுகாத்து அங்கிருந்து கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
மேற்படி சம்பவங்களில் ஈடுபட்ட இவர்கள் கடற் கரையில் வைத்து தங்களது சீருடையை அணிவதற்கு ஏற்கனவே அணிந்து இருந்த டீசேர்ட்டை மாற்றுவதற்கு முற்பட்ட வேளையிலேயே இவர்கள் அகப்பட்டுள்ளார்கள்.
தற்போது கடற் கரையில் ஆயிரக் கணக்கான பொது மக்கள் கூடியுள்ளார்கள்.
நிந்தவூர் பிரதேசத்தின் பல இடங்களிலும் பாதுகாப்பு தரப்பினர் நின்று கொண்டிருக்கின்றார்கள்.
நிந்தவூர் பிரதேசம் ஒரு பதட்ட நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது.

0 comments:
Post a Comment