• Latest News

    November 29, 2013

    கல்முனை தனியார் பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்த ரூபா இரண்டு கோடி நிதியினை கொய்கா நிதி ஒதுக்கீடு செய்ய இணக்கம்

    கல்முனை நகரில் அமைந்துள்ள தனியார் பஸ் நிலையத்தை சகல வசதிகளும் கொண்டதாக நவீனமயப்படுத்தும் திட்டத்திற்கு கொரியா நாட்டின் கொய்கா நிறுவனம் இரண்டு கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்வதாக இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி பார்க் சூக் உறுதியளித்துள்ளார்.

    கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் மற்றும் கல்முனை மாநகர சபையின் மேயர் எம்.நிஸாம் காரியப்பர்   ஆகியோர்கள் கொழும்பில் உள்ள கொரிய நாட்டு தூதரகத்தில் அமைந்துள்ள கொய்கா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்படி அபிவிருத்தி திட்டத்திற்கு உதவுவதற்கான இணக்கத்தை தொவித்துள்ளார்

    இதே வேளை, கல்முனை பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்திகளுக்கும் கொய்கா உதவ வேண்டுமென்ற கோரிககையும் முன் வைத்துள்ளமதாக தெரிவிக்கப்படுகின்றன.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை தனியார் பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்த ரூபா இரண்டு கோடி நிதியினை கொய்கா நிதி ஒதுக்கீடு செய்ய இணக்கம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top