• Latest News

    December 13, 2013

    சந்தாங்கேணி மைதானத்தில் கடின பந்து வலைப் பயிற்சி கூடம்

    பி.எம்.எம்ஏ.காதர்;
    கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான ஏ.எம்.றியாஸ் (பெஸ்டர்) அவர்களின் அயராத முயற்சியினால் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் கடின பந்து வலைப் பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு வருகின்றது.
    சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்னவிடம் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பெஸ்டர் றியாஸ் விடுத்த வேண்டுகோளின் பேரில் தெயட்ட கிருள்ள திட்டத்தின் கீழ் மேற்படி பயிற்சி கூடத்திற்கு நான்கு லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    இப்பயிற்சி கூட நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றது.
    கல்முனை மாநகர சபை உறுப்பினர் பெஸ்டர் றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இதன் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
    கல்முனையில் உள்ள 26 விளையாட்டுக் கழகங்கள் நீண்ட காலமாக இங்கு கடின பந்து வலைப் பயிற்சி கூடம் ஒன்றை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்து வந்ததைத் தொடர்ந்தே தான் இதனை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாக மாநகர சபை உறுப்பினர் பெஸ்டர் றியாஸ் தெரிவித்தார்.
    அதேவேளை கல்முனை சந்தாங்கேணி மைதானத்தின் கிழக்குப் பகுதியை தனியாரின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர், மாநகர முதல்வர் நிசாம் காரியப்பரிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
    இது விடயத்தில், தான் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சந்தாங்கேணி மைதானத்தில் கடின பந்து வலைப் பயிற்சி கூடம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top