• Latest News

    December 22, 2013

    எமது கட்சி இந்த நாட்டிலே ஒரு ஜனநாயகம் உடைய கட்சி. திடீரென எந்த நடவடிக்கைகளையும் தன்னிச்சையாக எடுக்க முன்வராது ! -மாவை சேனாதிராஜா

    அண்மைக்காலமாக நாட்டின் பல பாகங்களிலும் பிரதேச சபைகளின் வரவு செலவுத்திட்டங்கள் தோல்வியடைந்து வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக த.தே.கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

    அம்பாறை மாவட்டத்திற்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று நாவிதன்வெளி பிரதேசத்திற்கு வருகைதந்து பிரதேசசபை தொடர்பாகவும் கட்சியின்  எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையானார்.
    இந்நிகழ்விற்கு த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா. பா.அரியநேத்திரன், அம்பாறை மாவட்ட மாகாணசபை உறுப்பினர்களான தா.கலையரசன் மு.இராஜேஸ்வரன் மற்றும் நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளர். உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    தவிசாளர் எஸ்.குணரெத்தினம் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய மாவை சேனாதிராஜா,

    இன்று எமது நாட்டிலே அரசாங்கக் கட்சியின் 16 பிரதேச சபைகளுக்கான வரவு செலவுத்திட்டங்களும், வடமாகாணசபையின் மூன்று பிரதேசத்திற்கான வரவு செலவுத்திட்டங்களும் திருகோணமலையின் வெருகல் பிரதேசத்திற்கான வரவு செலவுத்திட்டங்களும் தேல்வியடையும் நிலையில் இருப்பதனை காணமுடிகின்றது.

    இதில் வடமாகாண சபையின் ஒரு பிரதேசத்திற்கான வரவு செலவுத்திட்டம் தற்போது எமது கட்சியின் செயற்பாட்டனால் வெற்றி காணப்பட்ட நிலையில் ஏனை பிரதேச சபைகளின் வரவு செலவுத்திட்டங்களும் வெற்றியடைய வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

    இனிவரும் பிரதேச சபைகளின் வரவு செலவுத்திட்டத்தினையும் வெற்றியடைய வைப்பதற்கான நடவடிக்கைகளை கட்சி ஆதரவாளர்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றோம்.

    எமது கட்சி இந்த நாட்டிலே ஒரு ஜனநாயகம் உடைய கட்சி. திடீரென எந்த நடவடிக்கைகளையும் தன்னிச்சையாக எடுக்க முன்வராது என்பதனை அனைவரும் புரிந்து நடக்கவேண்டிய தேவைப்பாடு உண்டு.

    அரசாங்கத்தினால் திணிக்கப்ட்ட அனைத்து தேர்தல்களிலும் எமது மக்கள் எம்முடன் இருந்து எமது கட்சிக்காகவும், தமிழ்த் தேசியத்திற்காகவும் ஜனநாயகமான முறையில் தமக்குள்ள வாக்குரிமையைப் பயன்படுத்தி எம்மினத்தின் பலத்தினை உலகறியச் செய்திருக்கின்றார்கள். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத அரசாங்கம் எமது கட்சி உறுப்பினர்களை தம்பக்கம் இணைப்பதில் குறியாக இருந்து செயற்பட்டார்கள்.

    எமது இனம் அடக்குமுறைகளுக்குள் இருந்து வாழும் சமூகம் இதற்காக இழந்த இழப்புக்கள் ஏராளம் என்றே கூறமுடியும். வடமாகாணசபையை பொறுத்தவரையில் எமது மக்கள் முழுக்க முழுக்க இராணுவ அடக்கு முறைகளுக்குள் இருந்து கொண்டே தமிழ்த் தேசியத்தினை கட்டிக்காத்து அதிகளவான உறுப்பினர்களை தெரிவு செய்து வடமாகாண சபையையும் கைப்பற்றி இருக்கின்றார்கள் என்றால் அது மக்களின் முழுப்பலத்தின் வெளிப்பாடே என்றுதான் கூறமுடியும்.

    நாவிதன்வெளிப் பிரதேச சபையின் செயற்பாடுகள் அன்று கலையரசன் தலைமையில் மிகவும் சிறப்பானமுறையிலே கொண்டு செல்லப்பட்டது என்பது நாமறிந்த உண்மையும் கூட. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அனந்தன் போன்ற சிலர் எமது கட்சியில் இருந்து கொண்டு ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு இங்கு நடைபெறும் அனைத்து வேலைப்பாடுகளுக்கும் முட்டுக்கட்டையாக செயற்படுவதாக அறிக்கைகள் எமக்கு கிடைத்திருக்கின்றன.

    அது தொடர்பாக அவருக்கான நடவடிக்கையாக கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கடிதம் மூலம் அறிவித்திருந்தோம். அதனையும் பொருட்படுத்தாமல் எதிர்வரும் இப்பிரதேசசபையின் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்து வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படுமானால் அவருக்கான அடுத்தகட்ட நடவடிக்கையினை எமது கட்சி எடுக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எமது கட்சி இந்த நாட்டிலே ஒரு ஜனநாயகம் உடைய கட்சி. திடீரென எந்த நடவடிக்கைகளையும் தன்னிச்சையாக எடுக்க முன்வராது ! -மாவை சேனாதிராஜா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top