• Latest News

    December 23, 2013

    நிந்தவூரில் இடம்பெற்ற சிறுவர்களின் கலை கலாச்சார நிகழ்வு..

    சுலைமான் றாபி;
    நிந்தவூர் Y2K பாலர் பராமரிப்பு நிலையத்தின் வருடாந்த விடுகை விழாவும், கலை கலாச்சார நிகழ்வும் நேற்றைய தினம் (22.12.2013) நிந்தவூர் பதுரியா பாடசாலையில் இடம்பெற்றது.  பராமரிப்பு நிலையத்தின் முகாமையாளர் AHM லாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகல்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், பாடசாலையின் அதிபர் AM நசீர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் AHM நாளீர், நிந்தவூர் Best of Young அமைப்பின் தலைவர் IM நிஸ்மி மற்றும் பராமரிப்பு நிலைய ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் பாடசாலையை விட்டு விலகிச்செல்லும் மாணவ, மாணவிகளுக்கு அதிதிகளால் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூரில் இடம்பெற்ற சிறுவர்களின் கலை கலாச்சார நிகழ்வு.. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top