• Latest News

    January 13, 2014

    தேவாலயங்களில் தாக்குதல் நடத்திய பிக்குமார் உட்பட 24 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

    ஹிக்கடுவையிலுள்ள தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில் 8 பிக்குகள் உள்ளிட்ட 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.

    ஹிக்கடுவைப் பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு தேவாலயங்கள் மீது 200 பேர் கொண்ட குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலின் போது பிக்குகளும் உடனிருந்துள்ளனர்.
     
    இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான அறிக்கை இன்று காலி நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

    எனினும், அடையாளம் காணப்பட்டுள்ள எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த அவர், நீதிமன்றின் உத்தரவுக்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.

    நீதிமன்ற உத்தரவுக்கமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேவாலயங்களில் தாக்குதல் நடத்திய பிக்குமார் உட்பட 24 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top