• Latest News

    January 25, 2014

    மட்டு. பாடசாலைகளில் இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்

    கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.நிசாம் தெரிவித்தார்.
    இதற்கு பிரதான காரணம், மாணவர்களை சித்தியடையச் செய்யாமல் தடுத்துக்கொண்டு செல்வதேயாகும் என குறிப்பிட்டுள்ளார்.
    கல்விக் கொள்கையில் ஒரு மாணவரின் கல்வி முன்னேற்றத்தில் எந்த தடையும் இருக்கக்கூடாது. ஒரு மாணவரின் முன்னேற்றத்தில் மாணவர் பின்தங்கியிருந்தால் அதற்கு காரணம் அதிபரும், ஆசிரியரும் தான். அதற்கு அவர்கள் தான் பொறுப்புக் கூறவேண்டும். மாணவர்களை வகுப்புக்களில் சித்தியடையாமல் செய்வதும் அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கக்கூடாது என கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ளது.
    கல்விக் கொள்கையின் சட்டம் இவ்வாறிருக்க அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்களை சித்தியடையச் செய்யாமல் விடுகின்றார்கள். இது தொடர்பில் யாராவது நீதிமன்றம் சென்றால் நீதிமன்ற தீர்ப்புக்கள் கல்விக் கொள்கைக்குச் சார்பாகவே இருக்கும்.
    இது சம்பந்தமாக என்னிடத்தில் வந்தால் கூட நான் மிக கடுமையான நடவடிக்கை எடுப்பேன். மாணவர்களை சித்தியடையச் செய்யாமல் அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் கல்விக் கொள்கைக்கு எதிராக இயங்கினால் அதிபர் ஆசிரியர்கள் சேவையியிலிருந்து நீங்கிப்போக வேண்டிய நிலையும் ஏற்படும் என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மட்டு. பாடசாலைகளில் இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top