• Latest News

    February 07, 2014

    கல்முனை தமிழ் பிரதேச செயலக பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கலும் இலங்கையின் 66வது சுதந்திர தின நிகழ்வும்

    அகமட் எஸ். முகைடீன்;
    கல்முனை தமிழ் பிரதேச செயலக பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கலும் இலங்கையின் 66வது சுதந்திர தின நிகழ்வும் பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
     
    இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல பாராளுமன்ற உறுபினரும் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான பி.எச். பியசேனஇ விசேட அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன், கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி வசந்த குமார, சர்வ மத மதகுருமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
     
    இதன்போது பிரதம அதிதியினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியக் கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றிய 68 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
     
    பட்டதாரி பயிலுனர்களினால் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி ஞாபக சின்னங்களும் வழங்கிவைக்கட்டது.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை தமிழ் பிரதேச செயலக பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கலும் இலங்கையின் 66வது சுதந்திர தின நிகழ்வும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top