• Latest News

    February 02, 2014

    ஏ.எப்.பி செய்தி சேவையின் முன்னாள் பெண் ஊடகவியலாளர் கொலை!

    ஏ.எப்.பி செய்தி சேவையின் முன்னாள் பெண் ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை செய்யப்பட்டுள்ளார்.

    பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு, இறந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக பத்தரமுல்லை பொலிஸார் தெரிவித்தனர். 

    குணசேகர தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். பெற்றோர்கள் தேவாலயத்திற்கு சென்றிருந்த போதே இவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
    பெற்றோர் வீடு திரும்பிய போது மெல் குணசேகர வீட்டில் பிணமாக கிடந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
    சம்பவம் குறித்து பத்தரமுல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவரது வீட்டின் சமையலறையிலிருந்தே அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொலை இடம்பெற்ற நேரத்தில் வீட்டிலிருந்த நாய் குரைக்காமையினால் அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்துசெல்கின்ற நாய்க்கு நன்றாக தெரிந்த ஒருவரே அவருடைய வீட்டுக்கு வருகைதந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

    இவர், பிச் ரேட்டிங் வர்த்தக நிறுவனத்திலேயே இறுதியாக கடைமாற்றியுள்ளார். ஏ.எப்.பி செய்தி சேவையின் முன்னாள் ஊடகவியலாளரான இவர் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையின் ஊடகவியலாளராக பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

     


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஏ.எப்.பி செய்தி சேவையின் முன்னாள் பெண் ஊடகவியலாளர் கொலை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top