• Latest News

    February 07, 2014

    உள்ளுராட்சி மன்ற அதிகாரிகளுக்கான 'அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்' என்ற தொனிப் பொருளில் மூன்று நாள் வதிவிடச் செயலமர்வு

    பி.எம்.எம்.ஏ.காதர்;
    உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரணையுடனும். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடனும்;  ஆசியா மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள் ளுர் பொருளாதார ஆட்சி செயற் திட்டத்தின் கீழ் உள்ளுராட்சி மன்ற அதிகாரிகளுக்கான 'அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்' என்ற தொனிப் பொருளில்  மூன்று நாள் வதிவிடச் செயலமர்வு நேற்று (06-02-2014) மட்டக்களப்பு ஈஸ்ட் லகுன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகான முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கலந்து கொண்டு  செயலமர்வை ஆரம்பித்த வைத்தா
     இங்கு முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜித், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் டபள்யு.பி.பி.ஜி.விக்கிரமசிங்க, ஆசியாமன்றத்தின் பணிப்பாளர் கோபாகுமார் கே தம்பி, பிதிப்பணிப்பாளர் ஏ. சுபாகரன் ஆகியோர் உரையாற்றினார்கள். கிழக்க மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், ஆகியோருடன் ஆசியா மன்றம் வேலைத் திட்டங்களை முன்னெடுத்துவரும் ஐந்து மாகாணங்களில் தெரிவு 15 உள்ளுராட்சி மன்றங்களின் அரிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்த கொண்டனர். ஆசியாமன்றத்தின் நிகழ்சித்; தித்;திட்ட உத்தியோகத்தர்களான எம்.ஐ.எம்.வலீத், றிசாட் சரீப், சசீகரன் ஆகியோர் நிகழ்வை நெறிப்படுத்தனார்கள்.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உள்ளுராட்சி மன்ற அதிகாரிகளுக்கான 'அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்' என்ற தொனிப் பொருளில் மூன்று நாள் வதிவிடச் செயலமர்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top