• Latest News

    March 16, 2014

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை, நீர் தாரை பிரயோகம்: 20 பேர் கைது

    ஹங்வெல்ல - துன்னான பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றிற்கு எதிராக பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது குழப்பநிலை ஏற்படுத்திய 20 பேர் பொலிஸாரால் கைது செய்யப்படடுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

    இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரினால் கண்ணீர்ப் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    எவ்வாறாயினும் தற்போது கொழும்பு - அவிசாவளை ஹை லெவல் வீதி ஹங்வெல்ல பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக குறித்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்தும்படி பொலிஸாரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

    .
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை, நீர் தாரை பிரயோகம்: 20 பேர் கைது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top