• Latest News

    March 12, 2014

    சிங்கள கல்வி அதிகாரிகள் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயம் வருகை

    எம்.வை.அமீர்;
    இன்று அரசு  அதிகமான பாடசாலைகளை பிள்ளை நேயப்பாடசாலையாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.  இந்த வகையில் மகாஓயா வலயக்கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த பிரதிக்கல்விப் பணிப்பாளர், ஆசிரிய ஆலோசர்கள் மற்றும் ஏனைய கல்வி அதிகாரிகளுடன் இன்று 2014.03.11 ஆந் திகதியன்று ஒரு நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டார்கள்.

    இப்பாடசாலையில் காணப்படுகின்ற பல்வேறு சிறந்த செயற்திட்டங்களை தங்களுடைய கல்வி வலயத்தில் அமுல்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களுக்கான விஜயமாக இவ்விஜயம்  அமைந்திருந்து.


    மேற்படி குழுவினர் இப்பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் தலைமையில் வரவேற்கப்பட்டதுடன் அவருக்கு உதவியாக திருமதி கே.கே. அகமட் அவர்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள். அத்துடன் சம்மாந்துறை பிரதிக்கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரிய ஆலோசரகர்களும்  கலந்து கொண்டனர்.

    மேற்படி விஜயமானது பிள்ளை நேயப் பாடசாலை தொடர்பான தரிசிப்பு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிங்கள கல்வி அதிகாரிகள் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயம் வருகை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top