• Latest News

    March 08, 2014

    நிந்தவூரில் மற்றுமொரு வீதி விபத்து : ஒருவர் பலி

    சுலைமான் றாபி;
    அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் பெரிய பாலத்தில்  நேற்றையதினம் (07.03.2014) இரவு 12.30 மணியளவில் மரக்கறிகளை ஏற்றிக் கொண்டுவந்த டிப்பர் வாகனம் பாலத்துடன் மோதுண்டதால் இந்த வாகனத்தில் பயணித்த இருவரில் ஒருவர் பலியாகியுள்ளார். 

    இந்த விபத்து சம்பவத்தில் அக்கரைப்பற்றை சேர்ந்த எம். மஜீத் (42) என்பவரே உயிரிழந்துள்ளார். இவருடன் பயணித்த ஐ.எல்.றஹீம் (25) தற்போது நிந்தவூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

    இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

    இதேவேளை கடந்த மாதம் 17ம் திகதி நிந்தவூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியானது குறிப்பிடத்தக்கதாகும்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூரில் மற்றுமொரு வீதி விபத்து : ஒருவர் பலி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top