• Latest News

    April 05, 2014

    மாளி­கா­வத்தை மைய­வாடி ஆக்கிரமிப்பு மீண்டும் ஆர்ப்பாட்டம்

    மாளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வாடி காணியில் கொழும்பு மாந­கர சபை தடை உத்­த­ர­வி­னையும் மீறி கட்­டட நிர்­மாணப் பணிகள் தொடர்­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து நேற்று வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கையை தொடர்ந்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட் டது.

    நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும் இடத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்­பாட்­டத்­தில் மேல் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான மக்கள் விடுதலை முன்னணி கே.டி.லால் காந்த, ஐக்கிய தேசிய கட்சியின் முஜிபுர் ரஹ்மான் பைரூஸ் ஹாஜி மற்றும் கொழும்பு மாந­கர சபை உறுப்­பினர் எம். ஷிராப்தீன் உட்பட மாளி­கா­வத்தை வாழ் முஸ்­லிம்கள் பலர் கலந்து கொண்­டனர்.

    மாளி­கா­வத்தை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லி­ல் ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன் அங்கிருந்து பேர­ணி­யாக வலம் வந்த ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மாளி­கா­வத்தை மைய­வாடி காணியில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்ற கட்­டடத்­திற்கு முன்­பாக, அர­சியல் சக்தி எது? முஸ்லிம் மையங்­களை அடக்­கு­வது எங்கே? முஸ்­லிம்­களின் மைய­வா­டிக்­கா­ணி­களை கொள்­ளை­ய­டிக்­காதே? வீடு­களை உடைப்­பது போன்று மைய­வாடி காணி­க­ளையும் அப­க­ரிக்க விட­மாட்டோம் என்ற கோஷங்­களை எழுப்­பிய வண்­ணமும் பதா­கை­களை ஏந்­திய வண்­ணமும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் காணப்­பட்­டனர்.
    சுமார் 11 வரு­டங்­க­ளுக்கு முன்பு கொழும்பு மாந­கர சபை­யினால் மாளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வா­டியில் 19.5 பேச்சர்ஸ் காணிகள் உபாலி ஜய­சிங்க என்­ப­வ­ருக்கு விற்­கப்­பட்­டமை பெரும் சர்ச்­சை­யாக உரு­வெ­டுத்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி கொழும்பு மாந­கர சபை­யினால் குறித்த காணியில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்ற கட்­ட­டத்­திற்கு தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்ட போதும் அக்­கட்­டிட நிர்­மா­ணப்­ப­ணிகள் இது­வ­ரை­யிலும் நிறுத்­த­வில்­லை­யென்றும் இது தொடர்பில் கொழும்பு மாந­கர சபை அதி­காரம் பிர­யோ­கிக்­கா­தது ஏன்? எனவும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் கேள்­வி­யெ­ழுப்­பியமை குறிப்பி டத்தக்கது.

    இவ்­வார்ப்­பாட்­டத்­தின்­போது மேல் மாகாண சபை உறுப்­பி­னர்கள் கருத்து தெரி­வித்­தனர்.

    முஜிபுர் ரஹ்மான்
    கொழும்பு மாந­கர சபை­யினால் 2003ம் ஆண்டு மாளி­கா­வத்தை மைய­வா­டியின் 19 பேர்ச்சஸ் காணி உபாலி ஜய­சிங்க என்­ப­வ­ருக்கு விற்­கப்­பட்­டது. தற்­போது குறித்த நிலப்­ப­ரப்பில் கட்­டட நிர்­மாணிப் பணிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்­நி­லையில் கடந்த மார்ச் மாதம் 10 திகதி கட்­டட நிர்­மாண பணி­களை நிறுத்த வேண்­டு­மென உத்­த­ர­விட்ட போதும் தொடர்ந்து இக்­கட்­டட நிர்­மா­ணப்­ப­ணிகள் இடம்­பெற்று வரு­கின்­றன.
    இந்­நி­லையில் இந்­நாட்டின் சட்­டத்தை எவரும் மதிப்­ப­தில்லை என்­ப­த­னையே இச்­சம்­பவம் எடுத்துக் காட்­டு­கின்­றது. பல­வந்­த­மான முறையில் இக்­கா­ணி­களை கைப்­பற்றி சட்­டத்தை மதிக்­காமல் இவ்­வாறு முரட்­டுத்­த­ன­மாக செயற்­ப­டு­வ­தனை எக்­கா­லமும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.
    எனவே குறித்த கட்­டிட நிர்­மா­ணப்­ப­ணி­களை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும் இல்­லையேல் அடுத்த வெள்­ளிக்­கி­ழமை பல்­லா­யி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்­களை இங்கு ஒன்று சேர்ப்போம் என்றார்.

    லால் காந்த
    கொழும்பு நகரில் வனாத்த முல்ல கொம்­ப­னித்­தெரு போன்ற பகு­தி­களில் வீடுகள் உடைக்­கப்­பட்டு காணிகள் அப­க­ரித்­ததைப் போன்று மாளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வாடிக் காணி­க­ளையும் அப­க­ரிக்க முற்­ப­டு­கின்­றனர். மைய­வாடி காணி­களை கூட விட்டு வைப்­ப­தாக தெரி­வ­தில்லை.
    தற்­போது கட்­டிட நிர்­மா­ணப்­ப­ணிக்கு தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டும் கூட நிர்­மா­ணப்­ப­ணிகள் நிறுத்­தப்­ப­ட­வில்லை. எமது நாட்டின் சட்­டத்­துறை இத்­த­கைய நிலை­மை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது. எனவே இது தொடர்பில் கொழும்பு மாந­கர சபை பொறுப்­புடன் செயற்­பட வேண்டும். இத்­த­கைய செயற்­பாட்­டினால் கொழும்பு வாழ் முஸ்லிம் மக்­களின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

    எனவே இத்தகைய மோசடியான கொடுக்கல் வாங்கலுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு செல்வதுடன் சத்தியாக்கிரக போராட்டத்திலும் ஈடுபடவுள்ளோம் என்றார்.

    இதேவேளை இத்தகைய செயற்பாட்டினால் கொழும்பு வாழ் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமட் ஷராப்தீனும் கருத்து தெரிவித்தார்.
     வீரகேசரி-
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாளி­கா­வத்தை மைய­வாடி ஆக்கிரமிப்பு மீண்டும் ஆர்ப்பாட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top