• Latest News

    April 25, 2014

    ஊதிய ஒப்பந்த விவகாரம்: தீர்வு கண்ட இலங்கை வீரர்கள்

    ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும், அதன் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே எழுந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
    ஐ.சி.சி உலகக்கிண்ண மற்றும் ஆசிய போட்டிகளில் பங்கேற்பதற்கு 20 சதவீதம் போட்டி கட்டணமாக தர வேண்டும் என்ற இலங்கை வீரர்கள் கோரிக்கையை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்கவில்லை.
    இக்காரணங்களினால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலேயே வீரர்கள் டி20 உலகக்கிண்ணத்தில் பங்கேற்றனர். இந்நிலையில் 7 வாரமாக நீடித்த இந்த விவகாரம் ஒரு வழியாக நேற்று முடிவுக்கு வந்துள்ளது.
    இலங்கை கிரிக்கெட் வாரியம் அமைத்த 3 பேர் கொண்ட குழு மற்றும் இலங்கை வீரர்கள் தரப்பில் உள்ள அணித்தலைவர் மேத்யூஸ் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    இதில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு உலகக்கிண்ணம் மற்றும் ஆசிய போட்டிகளில் பங்கேற்பதற்கான போட்டி கட்டணமாக 10 சதவீதம் தர கிரிக்கெட் வாரியம் முன்வந்ததை வீரர்கள் தரப்பினர் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து 13 வீரர்கள் ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடவுள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஊதிய ஒப்பந்த விவகாரம்: தீர்வு கண்ட இலங்கை வீரர்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top