• Latest News

    April 11, 2014

    பொது பல சேனவுக்கு எதிராக பாராளுமன்றத்தை பகிஸ்கரிக்க கலந்துரையாடி வருகின்றோம்: அமைச்சர் றிசாட்

    பொதுபல சேனா அமைப்பின் தீவிரவாத  செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து முஸ்லிம்  பாராளுமன்ற உறுப்பினர்கள்  பாராளுமன்ற அமர்வுகளை   பகிஷ்கரிப்பதன் மூலம் வலுவான செய்தியை வழங்க
    முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர்  ஹசன் அலி   தெரிவித்திருந்தார் இந்த நிலையில் பாராளுமன்ற கூட்டங்களை பகிஷ்கரிப்பது தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் றிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
    அதேவேளை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாதகாலத்திற்கு பாராளுமன்ற அமர்வுகளை பகிஸ்கரிக்க வேண்டுமென  எடுக்கப்படும் முடிவை வரவேற்பதா ககிழக்கு மாகாணசபை பிரதிதவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்துள்ளார் முஸ்லிம்களுக்கு பொது பல சேனவினால் இழைக்கப்படும் அநீதிகளை அரசாங்கம் தடுத்து நிறுத்தவேண்டும். இதற்காக கட்சிபேதமின்றி அனைத்து முஸ்லிம்பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைக்கவேண்டும். முஸ்லிம்கள் மீது பொதுபல சேனா கட்ட விழ்த்துவிட்டுள்ள இந்த காடைத்தனத்துக்கு எதிராக  முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் அரசியல் வாதிகள் அனைவரும் ஒன்றுபடுவது அவசியமாகும்.
    பாராளுமன்றத்தின் அமர்வுகளை ஒரு மாதகாலத்திற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கனிப்பது எனும் ஆலோசனை தொடர்பில் எனதுகட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசும் எமது கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட்பதியுதீன் அவர்களும் எனது இந்ததனிப் பட்டகருத்தினை பரிசீலனைசெய் துநடவடிக்கை எடுக்கவேண்டும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொது பல சேனவுக்கு எதிராக பாராளுமன்றத்தை பகிஸ்கரிக்க கலந்துரையாடி வருகின்றோம்: அமைச்சர் றிசாட் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top