• Latest News

    May 05, 2014

    சாய்ந்தமருது தோணா சுத்தமாக்கும் பணி ஆரம்பம்

    எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்;
    சுனாமிக்கு பின்னர் சுத்தமாக்கப்படாமல் சுகாதாரத்துக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருந்த சாய்ந்தமருது தோணா, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் உலக சமாதான அமைப்பின் இலங்கைக்கான தூதுவருமான ஏ.எம்.ஜெமீல் அவர்களும் கல்முனை மாநகரசபையின் முதல்வர் நிஸாம் காரியப்பர் அவர்களும் எடுத்துக்கொண்ட தீவிர முயற்ச்சியின் காரணமாகவும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜசூர் அவர்களது பங்களிப்பின் காரணாமாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் 13 லட்சம் ரூபாய் ஆரம்ப நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த தோணாவை  சுத்தமாக்கும் பணி இன்று (2014-05-05) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

    தோணாவை சுத்தமாக்கும் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் உலக சமாதான அமைப்பின் இலங்கைக்கான தூதுவருமான ஏ.எம்.ஜெமீல் அவர்களும் கல்முனை மாநகரசபையின் ஆணையாளர் ஜே.லியாக்கத்அலி அவர்களும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜசூர் அவர்களும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ஏ.ஏ.பஷீர் அவர்களும் சாய்ந்தமருது பிரதேச கிராம சேவகர்களின் தலைமை அதிகாரி எம்.எஸ்.எம்.நளீர் அவர்களும் மாநகரசபையின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    குறித்த தோணாவை சுத்தமாக்குமாறு பிரதேச மக்கள் வேண்டிக் கொண்டதர்க்கினங்க  பல்வேறு பட்ட ஊடகங்களும் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருது தோணா சுத்தமாக்கும் பணி ஆரம்பம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top