• Latest News

    May 29, 2014

    கல்முனை மாநகரசபையின் தென்கோடியில் உள்ள வரவேற்பு வளைவுக்கு பெயரிட வேண்டும்: மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர்

    எம்.வை.அமீர், எம்.ஐ.சம்சுதீன்;
    இன்று கல்முனை மாநகரசபையின் அமர்வு சபை முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற போது அங்கு கருத்து தெரிவித்த கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வரும் தற்போதைய மாநகரசபை உறுப்பினருமான ஏ.ஏ.பஷீர் அவர்கள் தனதுரையில் கல்முனை மாநகர சபையின் தெற்கே அமைந்துள்ள சாய்ந்தமருது மாளிகைக்காடு எல்லையில்அமைந்துள்ள வரவேற்பு வளைவுக்கு சாய்ந்தமருது வரவேற்கிறது கல்முனை மாநகர சபை என்ற பெயர் வாசகங்களை இட வேண்டும் என வலியுறுத்தினார். 
    இதனையும் சபை ஏற்றுக்கொண்டு சாய்ந்தமருதில் உள்ள குறித்த வளைவை புனர்நிர்மாணம் செய்து சாய்ந்தமருது சார்ந்த உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் சாய்ந்தமருது வரவேற்கிறது கல்முனை மாநகர சபை என்ற வாசகத்தை பொறிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகரசபையின் தென்கோடியில் உள்ள வரவேற்பு வளைவுக்கு பெயரிட வேண்டும்: மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top