• Latest News

    May 29, 2014

    கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்கள் கராட்டி தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவு

     எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்;
    கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கராட்டி சுற்றுப் போட்டியில் வரலாற்றில் முதற் தடவையாக கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்கள் மூவர் தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.சாய்ந்தமருது.

     அல் ஹிலால் வித்தியாலயத்தில் அண்மையில்  நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட கராட்டி போட்டிகளில்  17 வயதுப் பிரிவில் குமிதே போட்டியில் இஸட்.எம்.பஸ்னி இலாஹி, 19 வயதுப் பிரிவில் காட்டா போட்டியில் ஏ.ஆர்.ஆதிப் மொஹமட் மற்றும் குமிதே போட்டியில் எம்.எச்.அஹமட் ஹபீல் ஆகிய மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் விளையாடும் தகுதிகளைப் பெற்றுள்ளனர்.

    தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்ற போது கல்லூரி உப அதிபர் எம்.ஐ.எம்.அஸ்மி அவர்களுக்கான சான்றிதழ்களையும் கிண்ணங்களையும் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் கல்லூரி கராட்டி பெயிற்றுவிப்பாளர் யு.எல்.எம்.இப்றாஹிமும் கலந்து கொண்டார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்கள் கராட்டி தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top