• Latest News

    July 24, 2014

    பகிரப்பட்ட ஹஜ் கோட்டாக்களை உடன் ரத்துச் செய்ய நீதிமன்றம் உத்தரவு !

    ஹஜ் முகவர்களுக்கிடையில் பகிரப்பட்டுள்ள ஹஜ் கோட்டாக்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்துச்செய்த உயர் நீதிமன்றம் ஹஜ் முகவர்கள் நேர்முகப் பரீட்சையின் போது பெற்றுக் கொள்ளப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் ஹஜ் கோட்டாவை மீள பகிர்ந்தளிக்கும் படி நேற்று புதன்கிழமை உத்தரவு வழங்கியது.

    இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கோட்டா அநீ­தி­யான முறையில் பகி­ரப்­பட்­ட­தா­கவும் நேர்­முகப் பரீட்­சையில் ஹஜ் முகவர் நிலை­யங்கள் பெற்றுக்கொண்ட புள்­ளி­களின் அடிப்­ப­டையில் வழங்­கப்­ப­ட­வில்­லை­யெ­னவும் இதனை ரத்துச் செய்­யு­மாறு கோரி செரண்டிப் ஹஜ் உம்ரா முக­வர்கள் சங்கம் உயர்­நீ­தி­மன்றில் வழக்­கொன்­றினை தாக்கல் செய்­தி­ருந்­தது. சங்­கத்தின் 10 உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மிட்டு குறிப்­பிட்ட வழக்­கினை தாக்கல் செய்­தி­ருந்­தனர். இவ்­வ­ழக்­கினை விசா­ர­ணைக்கு எடுத்துக் கொண்ட உயர்­நீ­தி­மன்றம் கடந்த 10 ஆம் திகதி ஹஜ் கோட்டா பகிர்­வுக்கும் ஹஜ் நட­வ­டிக்­கை­க­ளுக்கும் இடைக்­கால தடை­யுத்­த­ரவு வழங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

    வழக்கில் பிர­தி­வா­தி­க­ளாக ஹஜ் குழுவின் இணைத் தலை­வர்­க­ளான சிரேஷ்ட அமைச்சர் எ.எச்.எம். பௌஸி பிர­தி­ய­மைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் முஸ்லிம் கலா­சார அலு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் எம்.எச்.எம். ஸமீல் ஹஜ் குழு உறுப்பின் டாக்டர் என்.எம்.எம். இக்பால், புத்­த­சா­சன மற்றும் மத அலு­வல்கள் அமைச்­சரும் பிர­த­ம­ரு­மான டி.எம். ஜய­ரத்ன, அமைச்சின் செய­லாளர் எம்.கே.பி. திசா­நா­யக்க, அகில இலங்கை ஜம் இய்­யத்தல் உலமா சபையின் பிரதி செய­லாளர் மௌலவி எம்.எஸ்.எம். காஸிம், என்.எம்.எம். நிப்லி, எம்.ஐ. றபீக்இ எம்.எச்.நய்­முதீன் ஆகியோர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தனர்.

    ஹஜ் கோட்டா பகிர்வில் அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளதை ஏற்றுக் கொண்ட நீதி­மன்றம் ஹஜ் முக­வர்கள் நேர்­முகப் பரீட்­சையில் பெற்றுக் கொண்­டுள்ள புள்­ளி­க­ளுக்கு அமை­வாக கோட்­டாவை மீளப் பகி­ரு­மாறு அமைச்சின் செய­லா­ள­ருக்கு உத்­த­ர­விட்­டது. மீள அமைக்­கப்­பட்ட கோட்டா பகிர்வு பட்­டி­யலை இன்று (வியா­ழக்­கி­ழமை) க்குள் சவூதி அரே­பியா ஹஜ் அமைச்­ச­ருக்கு அனுப்பி வைக்கும் படியும் செய­லாளர் நீதி­மன்­றினால் கோரப்­பட்­டுள்ளார்.

    இதே­வேளைஇ ஹஜ் கோட்டா பகிர்வு பட்­டியல் நீதி­மன்ற இடைக்­கால தடை­யுத்­த­ர­வுக்கு முன்பே ஹஜ் குழு இணைத்­த­லைவர் சிரேஷ்ட அமைச்சர் பௌஸி­யினால் சவூதி அரே­பிய ஹஜ் அமைச்­ச­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

    ஹஜ் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் பௌஸி யை விடி­வெள்ளி தொடர்பு கொண்டு வின­வி­ய­போது; தான் ஏற்­க­னவே கோட்டா பட்­டி­யலை சவூதி அரே­பி­யா­வுக்கு அனுப்பி வைத்­து­விட்­ட­தா­கவும் புதிய பட்­டியல் ஒன்­றினை சவூதி அரே­பியா ஏற்றுக் கொள்­ளுமா என்­பது பற்றி தெரி­யாது என்றார்.
    புத்­த­சா­சன மற்றும் மத அலு­வல்கள் அமைச்சின் செய­லாளர் திசா­நா­யக்­க­விடம் வின­விய போது நீதி­மன்ற உத்­த­ர­வுக்­கி­ணங்க ஹஜ் கோட்­டாவை முக­வர்கள் பெற்றுக் கொண்­டுள்ள புள்­ளிகள் அடிப்­ப­டையில் மீள பகிர்­வதில் எது­வித சிர­ம­மு­மில்­லை­யெ­னவும் இந்தப் பணியை தான் உட­ன­டி­யாக மேற்­கொள்­வ­தா­கவும் கூறினார்.-வீரகேசரி
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பகிரப்பட்ட ஹஜ் கோட்டாக்களை உடன் ரத்துச் செய்ய நீதிமன்றம் உத்தரவு ! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top