• Latest News

    August 12, 2014

    சுவேடோவின் வருடாந்த பரிசளிப்பு விழா!

    அகமட் எஸ். முகைடீன்: சமூக நலன்புரி அபிவிருத்தி அமைப்பு (சுவேடோ) – ஸ்ரீலங்கா, மருதமுனை ஏற்பாடில் வருடாந்த பரிசளிப்பு விழா – 2014 மருதமுனை கலாசார மண்டபத்தில் நேற்று (10.08.2014) மாலை நடைபெற்றது.
     
    இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட தமிழ்ப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான பி.எச். பியசேன, கௌரவ அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், விஷேட அதிதியாகளாக கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ. கபார், கல்முனை வலையக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல். சக்காப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
     
    இதன்போது 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் மருதமுனை சுவேடோ அமைப்பினரால் நடாத்தப்பட்ட 5ம் ஆண்டு புலமைப்பரிசில் முன்னோடிப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

    இலங்கை வானொலி, தொலைக்காட்சிப் புகழ் பாடகர்களான மருதமுனை எஸ்.எம்.கமால் மற்றும் நிந்தவூர் முஸ்தபா ஆகியோரின் பாடல்களும் சிறுவர் நிகழ்சிகளும் பார்வையாளர்களை மகிழ்வித்தது குறிப்பிடத்தக்கதாகும்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சுவேடோவின் வருடாந்த பரிசளிப்பு விழா! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top