எகிப்தின்
சர்வாதிகாரி அப்துல் பத்தாஹ் அல் ஸீசிக்கு அருகே ஆசனம் ஒதுக்கிய ஐக்கிய
நாடுகள் அவையின் நடவடிக்கையை விமர்சித்த துருக்கி ஜனாதிபதி அர்துகான்
விருந்தில் பங்கேற்கமாட்டேன் என அறிவித்துள்ளார். ஐ.நா பொதுக்கூட்டம் நியூயார்க்கில் நடைபெறுவதையொட்டி ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் உலக தலைவர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்துள்ளார் .
இதில் எகிப்தின் இராணுவ சர்வாதிகாரி
ஸீசிக்கு அருகே அர்துகானின் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. இது முதலில்
ஜனாதிபதி அர்துகானுக்கு தெரிவிக்கப்படவில்லை.இவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி
பாரக் ஒபாமா, தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சுமா, பான் கீ மூன்
ஆகியோரின் சீட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது.