பி.எம்.எம்.ஏ.காதர்: பெரிய நீலாவணை அக்பர் கிராம மஸ்ஜிதுல் அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசலின் பராமரிப்பில் இயங்கிவரும் அல்-மஃஹதுல் இஸ்லாமி அல்-குர்ஆன் மனனக் கற்கை நிலைய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று (03-09-2014) மஸ்ஜிதுல் அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசல் மேல்மாடியில் அல்-மஃஹதுல் இஸ்லாமி அல்-குர்ஆன் மனனக் கற்கை நிலையத்தின் தலைவரும், தாறுல்; ஹூதா மகளிர் அறபுக் கல்லூரி அதிபருமான அஷ்சேய்க் எம்.எல்.முபாரக் மதனி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆலோசகர் வை.எல்.அன்சார் கற்கை நிலையத்தின் பொறுப்பாசிரியர் அல்-ஹாபில் எம்.ஐ.சினான், ஆசிரியர்
அல்-ஹாபில் ஏ.ஜீஅப்சான், அஷ்சேய்க் ஆர.நுபிஸ் மக்கி, அஷ்சேய்க் எஸ்.எச்முஜீப் சலபி, யு.எல்.சஜீத் சலபி ஆகியோருடன் அல்-மஃஹதுல் இஸ்லாமி அல்-குர்ஆன் மனனக் கற்கை நிலையத்தின் பிரதித்தலைவர் ஐ.எல்.எம்.பாறூக், செயலாளர் என்.எம்.நாஸீக, பொருளாளர் ஏ.ஆர்.தாஜூதின் ஆகியோரும் பெற்றோர்களும் கலந்து கொணட்னர். விடுமுறை காலத்தில் நடாத்தப்பட்ட குர்ஆன் மனனப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கே பரிசில்கள் வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment