• Latest News

    September 11, 2014

    இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை என்கிறார் இராணுவப் பேச்சாளர்

    அல் கைதா  இயக்கத்தினால் இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை அது பற்றி நாட்டு மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை   என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். தெற்காசியாவின் சில குறித்த நாடுகளின் அல் கைதா இயங்கப்போவதாக அறிவித்துள்ளது அந்த நாடுகளின் பட்டியலில்  இலங்கை குறிப்பிட்டப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் . 
     
    எனினும் நாட்டில் மிகவும் வலுவானதும் தந்திரோபாயம் மிக்கதுமான ஓர் இராணுவ கட்டமைப்பு காணப்படுவதாகவும் எனவே பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்நோக்க முடியும் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

    அதேவேளை அண்மையில் அரசாங்கத்தின்  பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இலங்கையில் உள்ள சில குழுக்கள் வெளிநாட்டு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களுடன்  தொடர்பை ஏற்படுத்த முயன்றுள்ளமை பற்றி  தகவல் கிடைத்துள்ளதாக  பாதுகாப்பு தொடர்பான அமெரிக்க அமைப்பு ஒன்றுக்கு தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை என்கிறார் இராணுவப் பேச்சாளர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top