மொனராகலையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் அனைத்து தனியார் பஸ்களும் வேலை
நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்
தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த ஊவா தேர்தலை முன்னிட்டு மொனராகலை டிப்போவிற்கு அதிக இபோச பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தனியார் பஸ்கள் இதுவரை காலடும் பெற்றுவந்த ஆதாயம் இல்லாது போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்வரை வேலை நிறுத்தத்தை கைவிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் பஸ் பயண நேரத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment