• Latest News

    September 22, 2014

    தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதல்லாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்ப்பு நிகழ்வு

    எம்.வை.அமீர்;
    தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில், கல்வி பயிலும் முதலாம் வருட மாணவர்களுக்கு, இரண்டாம் வருட மாணவர்களால் வரவேற்பளிக்கும் நிகழ்வு 22-09-2014ல் இப்பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

    இரண்டாம் வருட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வுக்கு பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். விசேட அதிதிகளாக கலாநிதி கோமதிராஜ் மற்றும் கலாநிதி யூ.எல்.செயினுடீன் ஆகியோரும் ஏனைய கல்விசார் கல்விசார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்த அதேவேளை பிரயோக விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் தமிழ் சிங்கள முஸ்லிம் மாணவர்கள் அனைவரும் இணைந்திருந்தனர்.

    குறித்த நிகழ்வில் இரண்டாம் வருட மாணவர்களால் முதலாம் வருட மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன. இங்கு கல்வி கற்கும் மாணவர்களால் கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.







    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதல்லாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்ப்பு நிகழ்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top