• Latest News

    September 06, 2014

    இலங்கை அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

    இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என இந்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

    சென்னையில் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன், நகர்ப்புற மேம்பாடு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார்.

    மெட்ரோ ரெயில் திட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    இலங்கை தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசை பொறுத்தவரையில் மற்ற நாடுகளை போலவே இலங்கை அரசுடனும் நல்லுறவு கொண்டுள்ளது. இலங்கை பிரச்சினைக்கு தூதரகம் மூலம் அவ்வப்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top