உயிரோடிருக்கும் ஆங்கில பாட ஆசிரியர் ஒருவர் இறந்துவிட்டதாக மரண அறிவித்தல் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்ட சம்பவம் ஒன்று நுவரெலியாவில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது, நுவரெலியா உடபுஸ்ஸல்லாவ பிரதான பாதையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே அவர் இறந்து விட்டதாக மரண அறிவித்தல் அச்சிடப்பட்டு நுவரெலியா நகரத்திலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தான் புகார் ஒன்றை செய்துள்ளதாகவும் இது தொடர்பாக நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் குறித்த ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
தான் பாடசாலையில் மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பாகவும் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வதாகவும் இதனை பொருக்காத யாரோ ஒரு சிலர் இதனை செய்திருக்கலாம் என தான் சந்தேகப்படுவதாகவும் குறிப்பிடுகின்றார்.
இது தொடர்பாக தான் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதோடு பேஸ்புக் தொடர்பாக மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதோடு, இந்த சம்பவம் தனக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது, நுவரெலியா உடபுஸ்ஸல்லாவ பிரதான பாதையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே அவர் இறந்து விட்டதாக மரண அறிவித்தல் அச்சிடப்பட்டு நுவரெலியா நகரத்திலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தான் புகார் ஒன்றை செய்துள்ளதாகவும் இது தொடர்பாக நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் குறித்த ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
தான் பாடசாலையில் மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பாகவும் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வதாகவும் இதனை பொருக்காத யாரோ ஒரு சிலர் இதனை செய்திருக்கலாம் என தான் சந்தேகப்படுவதாகவும் குறிப்பிடுகின்றார்.
இது தொடர்பாக தான் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதோடு பேஸ்புக் தொடர்பாக மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதோடு, இந்த சம்பவம் தனக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment