இந்த வீட்டுத் திட்டத்தில் எஞ்சியிருக்கின்ற 83 வீடுகளும் இனந்தெரியாத நபர்களினால் நாளுக்கு நாள் சேதமாக்கப்பட்டு வருவதையும், பல ஏழைக் குடும்பங்கள் குமர்ப்பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வீடற்று இருப்பதையும், அவதானித்த கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள்
பகிரங்க அறிவித்தல் ஒன்;றின் மூலம் கல்முனை பிரதேச செயலகத்தில் காணிக்கச்சேரி ஒன்றை நடாத்தி தகுதியானவர்களை இனங்கண்டு எஞ்சியிருக்கின்ற இந்த வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. ஆகவே தகுதியான பொது மக்கள் இந்த வீட்டைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆயத்தமாக இருக்குமாறு கிழக்க மாகாண அபிவிருத்தி மன்றத்தின் கல்முனை இணைப்பாளரும,; கல்முனை மாநகர சபை உறுப்பினருமான இஸட்.ஏ.எச்.றஹ்மான் பொது மக்களைக் கேட்டுள்ளார்.
இந்த வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடுகளை வழங்குவதற்கென 55 பேரின் பெயர்ப்பட்டியல் முன்னர் அம்பாறை மாவட்டச் செயலாளருக்கு வழங்கப்பட்டிருந்த போதும் அந்தப் பெயர்ப்பட்டியலை முன்பிருந்த மாவட்டச் செயலாளர் நிராகரித்திருந்தமை குறிப்பித்தக்கது.
0 comments:
Post a Comment