• Latest News

    October 10, 2014

    மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நவாஸ் நிந்தவூரில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்

    நிந்தவூரைச் சேர்ந்த ஏ.எச்.திலிப் நவாஸ் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ  முன்னிலையில் கடந்த வாரம் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இவரை பாராட்டிக் கௌரவிக்கும் வைபவம் நிந்தவூரில் 'மண்ணிண் மகுடம்' எனும் தலைப்பில் (07.10.2014) நடைபெற்றது.

    இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட பதிவாளர் எச்.எம். அப்துல் சத்தார் தலைமையில் நிந்தவூர் ஜும்ஆபள்ளிவாசல் முன்றலில் நடைபெற்ற இந்த நிகழ்வில,; பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ரி. ஹசன் அலி, பைசால் காசிம், மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியாழ், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், உப தவிசாளர் எம்.எம்.எம். அன்சார், எதிர்க்கட்சித் தலைவர் வை.எல். சுலைமாலெவ்வை, பிரதேச சபை உறுப்பினர்கள்,;, உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    இவ்விழாவில் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நவாஸை பலரும் பாராட்டி நினைவுப் பொருட்களை வழங்கினார்கள். அவருக்கு பொன்னாடைகளும் போர்த்தப்பட்டன.

    இதற்கு முன்னதாக மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நவாஸ் நிந்தவூர் பிரதேச செயலகத்தின் முன்றலில் இருந்து பிரதான வீதியினூடாக மாலைகள் அணிவித்து, வாகன ஊர்தியில் அழைத்து வரப்பட்டார்.


































    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நவாஸ் நிந்தவூரில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top