• Latest News

    October 03, 2014

    கிழக்கு மாகாண முஸ்லீம் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல்

    அபூ இன்ஷாப்:
    புனித ஹஜ்ஜூப் பெருநாளையிட்டு காத்தான்குடி முஸ்லீம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண முஸ்லீம் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல் நிகழ்வு எதிர்வரும் 2014.10.07ம் திகதி பிற்பகல் 3.00 மணி தொடக்கம் மறுநாள் 08ம் திகதி அதிகாலை 5.15 வரைக்கும்  காத்தான்குடி கடற்கரையோரத்திலுள்ள ஜூமைறா பெலஸில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    'முழு நிலவில்'; நடைபெறவுள்ள இந்த ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல் நிகழ்வில் உரையரங்கம், கவிதையரங்கம், நகைச்சுவை அரங்கம் போன்ற பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் பரிசில்கள ;மற்றும் அன்பளிப்புக்கள் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

    இந்த ஒன்று கூடலில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ் கடிதங்கள் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லீம் ஊடகவியலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி முஸ்லீம் மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஏ.எம்.ஜெலீஸ் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிழக்கு மாகாண முஸ்லீம் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top