• Latest News

    November 05, 2014

    ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டாம்: ரணிலிடம் கட்சிகள் கோரிக்கை

    எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அரசியல் கட்சிகள் பலவும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

    மத்திய மாகாணசபையின் உறுப்பினர் அசாத் சாலி இதனை இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

    ரணில் விக்கிரமசிங்க போட்டியிடாமல் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தரவேண்டும் என்று அந்தக்கட்சிகள் கோரியிருப்பதாக அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பான கடிதம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவம் இதற்கு சாதகமான பதிலை வழங்கும் என்று எதிர்ப்பார்ப்பதாக அசாத் சாலி தெரிவித்துள்ளார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டாம்: ரணிலிடம் கட்சிகள் கோரிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top