எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தும் முயற்சியில் பல்தரப்பினரும் ஈடுபட்டிருந்தனர். எனினும் ரணில் விக்கிரமசிங்க அக்கட்சியின் சார்பாக போட்டியிடுவதில் தீவிரமாக உள்ளார். இதன் காரணமாக அந்த முயற்சிகள் தற்போது கைவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சுதந்திரக் கட்சிக்குள்ளிருந்தே பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முயற்சிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியில் ஜே.வி. பி மற்றும் மாதுளுவாவே சோபித தேரர் ஆகியோரின் ஆதரவும் கிடைத்துள்ளது.
மேலும் ஜனாதிபதி குடும்பத்தினரின் நடவடிக்கைகளால் அதிருப்தியுற்றுள்ள சுதந்திரக் கட்சி மூத்த தலைவர்களும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளித்துள்ளனர்.
பெரும்பாலும் முன்னாள் பிரதமர் ரத்தினசிறி விக்கிரமநாயக்கவே இவ்வாறு பொது வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தும் முயற்சியில் பல்தரப்பினரும் ஈடுபட்டிருந்தனர். எனினும் ரணில் விக்கிரமசிங்க அக்கட்சியின் சார்பாக போட்டியிடுவதில் தீவிரமாக உள்ளார். இதன் காரணமாக அந்த முயற்சிகள் தற்போது கைவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சுதந்திரக் கட்சிக்குள்ளிருந்தே பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முயற்சிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியில் ஜே.வி. பி மற்றும் மாதுளுவாவே சோபித தேரர் ஆகியோரின் ஆதரவும் கிடைத்துள்ளது.
மேலும் ஜனாதிபதி குடும்பத்தினரின் நடவடிக்கைகளால் அதிருப்தியுற்றுள்ள சுதந்திரக் கட்சி மூத்த தலைவர்களும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளித்துள்ளனர்.
பெரும்பாலும் முன்னாள் பிரதமர் ரத்தினசிறி விக்கிரமநாயக்கவே இவ்வாறு பொது வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 comments:
Post a Comment