வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்த்து வாக்களிக்கும் என்று மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீது அரசாங்கத்துக்கு ஆதரவாக நாங்கள் வாக்களித்துள்ளோம்.
எனினும் அரசாங்கம் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
குறைந்த பட்சம் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களில் கூட எங்களது கட்சிக்கு போதுமான அளவில் நிதியொதுக்கப்படுவதில்லை.
எனவே இந்த நிலையை மாற்ற அரசாங்கம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் வரவு செலவுத் திட்டத்தில் இறுதி வாக்கெடுப்பில் எங்களது கட்சி அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீது அரசாங்கத்துக்கு ஆதரவாக நாங்கள் வாக்களித்துள்ளோம்.
எனினும் அரசாங்கம் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
குறைந்த பட்சம் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களில் கூட எங்களது கட்சிக்கு போதுமான அளவில் நிதியொதுக்கப்படுவதில்லை.
எனவே இந்த நிலையை மாற்ற அரசாங்கம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் வரவு செலவுத் திட்டத்தில் இறுதி வாக்கெடுப்பில் எங்களது கட்சி அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment