• Latest News

    November 07, 2014

    பொது வேட்பாளரை தெரிந்தெடுக்கும் பணியில் சந்திரிக்கா தீவிரம்

    எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொதுவேட்பாளரை தெரிந்தெடுக்கும் பணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என ஊடக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

    வெளிநாட்டில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இந்த பணிகளில் ஈடுபட்டு வருவதை அவரை சார்ந்த தரப்புக்களும் உறுதிசெய்துள்ளன. எனினும் அவர் பொதுவேட்பாளராக போட்டியிடுவாரா? என்பது தெரியவரவில்லை. இந்தநிலையில் எதிர்க்கட்சிகளும் பொது வேட்பாளர் ஒருவரை தெரிந்தெடுக்கும் நடவடிக்கைகளில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனஎன தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொது வேட்பாளரை தெரிந்தெடுக்கும் பணியில் சந்திரிக்கா தீவிரம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top